அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கம்

ஊத்தங்கரை, மார்ச் 19:  ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வெப்பம் மற்றும் தானியங்கி பொறியியல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் எப்சிபா ஏஞ்சலா துரைசாமி வரவேற்று பேசினார். தஞ்சை பொறியியல் கல்லூரி பேராசிரியர் வேலப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே அடிப்படை வெப்பம் மற்றும் தானியங்கி பொறியியல் குறித்து பேசினார். அப்போது 2 மற்றும் 3ம் ஆண்டு இயந்திரவியல் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். மராமரத்னம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை இயந்திரவியல் பேராசிரியர் பஞ்சமூர்த்தி செய்திருந்தார்.

Related Stories: