×

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும்

தொண்டி, மார்ச் 19: கடையர் இனத்தை தேவேந்திர குலவேளாளர் பட்டியலில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி நேற்று எம்.வி.பட்டினத்தில் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கடையர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று தொண்டி அருகே மீனவ கிராமமான எம்.வி.பட்டினத்தில் உதயணன் தலைமையிலும், தெய்வ சிங்கம் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. கடலோர மாவட்டங்களில் அதிகமாக வசித்து வரும் கடையர் இன மக்களை தேவேந்திர குலவேளாளர் பட்டியலோடு சேர்க்க அரசு அதிகாரிகளும் தற்போதைய அரசியல்வாதிகளும் முயற்சித்து வருகின்றனர்.

முற்றிலும் கடல் தொழில் செய்து வரும் இவ்வின மக்களை விவசாயம் செய்யும் மக்களோட இணைக்க முயற்சிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். கடையர் இனத்தை தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இணைக்க கூடாது. இவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சோக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கோபி கூறியது, கடல்சார் தொழிலான பாசி வளர்த்தல், மீன் பிடித்தல், முத்து குளித்தல் உள்ளிட்ட தொழில் செய்து வரும் மக்களை விவசாயம் செய்யும் மக்களோடு இணைப்பது மிகவும் தவறாகும். இது எங்கள் இனத்தை அழிக்க அரசு எடுக்கும் முயற்சியாகும். எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் வரும் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை