தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

திண்டிவனம், மார்ச் 19: மக்களவை தேர்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைகூட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சார் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பறை, மாற்றுதிறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என சப்-கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். மேலும் மாதிரி ஓட்டு பதிவினை செய்து பார்க்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து மின்னணு ஓட்டு பதிவு இயந்திரம் ஒயர் இணைப்புகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: