×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேதராப்பட்டில் வாகன சோதனை

வானூர், மார்ச் 19:  புதுச்சேரி- மயிலம் சாலையில் சேதராப்பட்டில்  புதுச்சேரி போலீசார் மற்றும் அதிகாரிகள் எல்லை சோதனைச்சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கும், தமிழக பகுதியிலிருந்து புதுச்சேரிக்கும் பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளை எடுத்து செல்வதை தடுக்க புதுச்சேரி தமிழக எல்லையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடியில் மத்திய போலீசார் மற்றும் புதுச்சேரி மாநில போலீசார், வருவாய்த்துறை மற்றும் தேர்தல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சேதராப்பட்டு தனியார் கம்பெனிக்கு வரும் லோடு வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கம்பெனியை விட்டு விட்டு செல்லும் இருசக்கர வாகனங்களையும் விட்டுவைக்காமல் சோதனை செய்து வருகின்றனர்.



Tags : Vehicle Testing ,Election ,Sattarapalla ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...