மணல் கடத்திய 2 பேர் கைது

உளுந்தூர் பேட்டை, மார்ச் 19: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கெடிலம் ஆற்றில் இருந்து டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 4 டயர் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தலில்  ஈடுபட்ட வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி(32), ஜெயராஜ்(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Related Stories: