எலிபேஸ்ட் சாப்பிட்டு வாலிபர் சாவு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 15:  உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அந்தோணி ராஜ்(18). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் செல்வராஜ் மனைவி எலிசபெத்(42) கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: