சேலம், மார்ச் 12: வருடாந்திர மளிகைப்பொருட்கள் வாங்க சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் பொதுமக்கள் குவிந்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் தானிய வகைகளும், மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, கசாகசா, பட்டை, லவங்கம், வெந்தயம், சோம்பு, கடுகு உள்ளிட்டவைகளை அறுவடை செய்து இந்தியா முழுவதும் அனுப்பி வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் பச்சைபயிர், உளுந்து, தட்டைபயிர், அவரைக்கொட்டை உள்ளிட்ட சாகுபடி ெசய்யப்படுகின்றன. இந்த இடங்களில் அறுவடை செய்யப்படும் பயிர்களை சுத்தம் செய்து விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.சேலம் பால் மார்க்கெட், லீ பஜார், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக புது மளிகைக்கடைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பால்மார்க்ெகட் பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. பொதுமக்கள் புது மளிகைப்பொருட்களை வாங்கி மூட்டை, மூட்ைடயாக கட்டி சேலம் சத்திரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து ரயில் மூலம் தங்கள் ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.