கந்தர்வகோட்டை அருகே டிராக்டர் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி

கந்தர்வகோட்டை, மார்ச் 12: கந்தர்வகோட்டை அருகே டிராக்டர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். கந்தர்வகோட்டை அருகே விராலிப்பட்டியை சேர்ந்தவர்கள் விஜய் (26) மற்றும் பார்த்திபன்(28). இவர்கள் இருவரும் நேற்று ஆட்டோவில் புதுக்கோட்டை நோக்கி சென்றனர். அப்போது ஆதனக்கோட்டை அருகே கருவாட்டு அருகே வந்தபோது பெருங்களூரில் இருந்து ஆதனக்கோட்டை நோக்கி வந்த டிராக்டரின் பக்கவாட்டில் ஆட்டோ மோதியதில் விஜயும், பார்த்திபனும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பலியானார். பலத்த காயத்துடன் விஜய் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: