ஜெயங்கொண்டத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம், மார்ச்12: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் சிறப்பாகவும், விதவைப் பெண்களுக்கு மதிப்பும், உரிமையையும் பெறுவது உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி, விழிப்புணர்வு கூட்டம் ஆகியவை நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் திருடன் மாமியார் மருமகளிடம் மாட்டிகொண்டு படும்பாடு பற்றிய விழப்புணர்வு நாடகம், நடனம்,  நகைச்சுவை, குடிபோதை பற்றிய குறுந்தகவல், இளமையில் திருமணம், இதனால் ஏற்படும் பிரச்னை, மாறுவேட போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், முதியோர்கள், விதவைப் பெண்கள், இளம் பெண்கள், சமூக ஆர்வலர்கள்.ஆசிரியை தேவி, அருட்சகோதரி மரிய வியான்னி,உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories: