குற்றாலத்தில் வேளாண் கருத்தரங்கு

தென்காசி, மார்ச் 12:  குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காய்கறி பயிர்களில் உயர் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடந்தது. விவசாயிகள் நலன் கருதி நடந்த இக்கருத்தரங்கிற்கு தென்காசி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் முத்துமாலை தலைமை வகித்தார். வாசு உதவி இயக்குநர் ராஜா வரவேற்றார். கடையம் உதவி இயக்குநர் நடராஜன் தொழில்நுட்ப உரையாற்றினார். உதவி இயக்குநர்கள் முத்துசாமி, விஜயசந்திரன், விஜயன்,முருகன், ஸ்டாலின், பாண்டித்துரை, ரூபி, செல்வக்குமார், மணிகண்டன், விஜய், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் வடகரை ஜாகிர்உசேன் மற்றும் சுந்தரபாண்டியபுரம், கணக்கப்பிள்ளைவலசை, தென்காசி வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.

Related Stories: