ஆத்தூர், மார்ச் 8: ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தேடி விவசாய கிணறுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. தவிர, காசு கொடுத்து கேன் குடிநீர் வாங்கும் அவலம் ஏற்பட்டது. காலை நேரத்தில் குடிநீர் தேடி செல்வதால், மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கோடை தொடக்கத்திலேயே ஒரு மாதத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் ஊராட்சி நிர்வாகம், அடுத்து வரும் இரண்டு மாதங்கள் எவ்வாறு குடிநீர் விநியோகம் என பொதுமக்கள் முடிவு செய்தனர்.