திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்தநகர் முதல்தெருவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் அனுமந்தன்நகர் நகர் முதல் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள் கால்வாயில் செல்ல வழியின்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் பல்கி பெருகி பொதுமக்களின் இரவு தூக்கத்தை கெடுப்பதுடன் பல்வேறு நோய்களையும் பரப்பி வருகிறது. அனுமந்தநகர் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி எல்லைக்குட்பட்டதாகும். ஆனால் இப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களை அனுப்புவதே இல்லை. இதனால் குப்பைகளும், கழிவுநீரும் கால்வாயில் தேங்கியே நிற்கிறது.