தரங்கம்பாடி, மார்ச்7: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நிலக்கடலை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நிர்வாகத்திற்கான உயரிய தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் நீர்வள மற்றும் நிலவள திட்டத்தின் கீழ், தரங்கம்பாடி அருகே உள்ள சிங்கானொடை கிராமத்தில் நடந்த இந்த பயிற்சியில் வேளாண் பல்கலை கழகத்தில் இயங்கி வரும் நீர்நுட்ப மையம் வாயிலாக உலக வங்கி நிதியுடன் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், நீர்வள, நிலவள திட்டத்தில் காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கு ஏற்ற வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உகந்த தொழிற்நுட்பங்களை வயல்வெளி செயல் விளக்கமாக பயிற்சி அளிக்கபட்டு வருகிறது.