காரைக்கால், மார்ச் 6: காரைக்காலில் மகா சிவராத்திரியையொட்டி கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியாக பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்ய ஓம்காரநந்தா சுவாமியின் தலைமையில் செயல்படும் தர்ம ரக்ஷ்ணா ஸமிதி சார்பில் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் நேற்று முன்தினம் மாலை மகா சிவராத்திரி வழிபாடு நடத்தப்பட்டது. காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறிய வடிவிலான சிவலிங்கம் மற்றும் பூஜை பொருட்களுடன் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அமைப்பின் சார்பில், களி மண்ணால் தயார் செய்யப்பட்ட சிறிய அளவிலான சிவலிங்கம், ருத்ராட்சம், அட்ச்சதை, நிவேதன பிரசாதம், விபூதி, குங்கும பிரசாதம், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.