நெல்லை, பிப். 27: அம்பை அருகே வைராவிகுளத்தில் அமையவுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அம்பை அருகே ஆலடியூரை சேர்ந்த ராமையா என்பவர் தலைமையில் அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு: அம்பை அருகே வைராவிகுளத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. மதுபான கடை அமையவுள்ள இடம் ஆலடியூர், தெற்கு பாப்பான்குளம், அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் ஆகிய இடங்களுக்கு மத்தியில் உள்ளது.