ஆலங்குளத்தில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்குளம், பிப். 27:  ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கங்காதரன், ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட இணை செயலாளர் பழனி ஆகியோர் பேசினர்.

ஆலங்குளம் வட்ட கிளை பொறுப்பாளர் கல்யாண ராமசுப்பிரமணியன் வரவேற்றார்.  ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஓய்வுபெறும் நாளில் ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.  ஊரக வளர்ச்சித்துறை சங்க செயலர் அந்தோணி நன்றி கூறினார்.

Related Stories: