பந்தலூர், பிப்.22: பந்தலூர் அடுத்த கிளன்ராக் ஆதிவாசி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுதுள்ளனர். பந்தலூர் அருகே கிளன்ராக் ஆதிவாசி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் குடியிருப்புகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதனால் அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில், கடந்த வாரம் மின் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது. பந்தலூரில் இருந்து சுமார் 4 கி.மீ., தூரமுள்ள கிராமத்திற்கு வனப்பகுதியில் உள்ள மோசமான நிலையில் இருக்கும் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.