அவிநாசி,பிப்.22: கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாந்திலட்சுமி தலைமை தாங்கி, பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட பயிற்சியாளர்கள் சிவன்மலையப்பன், அங்கயற்கண்ணி பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர். இந்தப் பயிற்சியில் அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த சேவூர், குப்பாண்டம்பாளையம், பழங்கரை, துலுக்கமுத்தூர், கருவலூர், தண்டுக்காரன்பாளையம், பொங்கலூர், ஆலத்தூர், புளிப்பார், தத்தனூர் உள்ளிட்ட 31 ஊராட்சிகளில் இருந்தும் ஊராட்சி செயலாளர்கள், வறுமை ஒழிப்பு சங்கத்தினர், சமுதாயம் வள மைய பயிற்றுனர்கள், ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.