தேவதானப்பட்டி, பிப். 22: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, மேல்மங்கலம், குள்ளப்புரம், உள்ளிட்ட இடங்களில் நெல் அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் என்எல்ஆர், கோ45 உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். வழக்கம்போல் ஒரு ஏக்கருக்கு 2.5 முதல் 3.5டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால், நடப்பாண்டில் ஒரு ஏக்கருக்கு 2 முதல் 2.4டன் வரை அதிக மகசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.