×

சாயல்குடி அருகே விபத்தில் ஒருவர் பலி

சாயல்குடி, பிப். 21: வேம்பார் புஞ்சையாபுரத்தை சேர்ந்த முனியசாமி மகன் மாடசாமி (34). இவர் நேற்று முன்தினம் இரவு தனது டூவீலரில் சாயல்குடி அருகே மலட்டாறு வந்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மலட்டாறு முக்குரோடு அருகில் எதிரே வந்த வேன், பைக்கில் மோதி படுகாயமடைந்தார். காயமடைந்தவரை மீட்டு 108 வாகனம் மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், செல்லும் வழியிலியே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Tags : accident ,Soilkuldi ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...