4 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து சாவு

உளுந்தூர்பேட்டை, பிப். 21:  உளுந்தூர்பேட்டை அருகே உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதில் செந்தாமரை(46) என்ற மனைவியும், ஒரு ஆண், 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக செந்தாமரைக்கு வயிற்றுவலி இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்தவரை உறவினர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தாமரை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் கேசவன்(42) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: