திருக்கோவிலூர், பிப். 21: திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியில் உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் அனைத்திந்திய மாதர் சங்கம், மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வீரப்பாண்டி, ஒட்டம்பட்டு, அருணாபுரம், கல்லந்தல், தண்டரை, வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர், நாயனூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்ட தலைவர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு நிர்வாகி வேல்மாறன், மாவட்ட செயற்குழு செந்தில், வட்ட செயலாளர் முத்து வேல், மாவட்ட துணை செயலாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.