செஞ்சி, பிப். 20: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். வரும் மார்ச் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவிற்கு முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் ஆலோசனை நடத்தினார். அப்போது குடிநீர், கழிவறை, போக்குவரத்து, காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் பொதுமக்களுக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது குறித்தும் விளக்கம் அளித்தார்.