திருவக்கரை கோயிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

வானூர், பிப். 20:  வானூர் தாலுகா திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் மாசி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. திருவக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சந்திரமவுலீஸ்வரர் மற்றும் வக்கரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதாந்திர பவுர்ணமி பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடந்தது. இதையொட்டி காலையில் வக்கரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தேறியது. மதியம் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் விளக்கு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு ஜோதி தரிசனமும் நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழுப்புரம் மற்றும் வானூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: