லாட்டரி, மது விற்ற6 பேர் கைது

திருப்பூர், பிப். 20: திருப்பூர் மாநகர் பகுதிகளில் சூதாட்டம் மற்றும் லாட்டரி, மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 மதுபாட்டில்கள், ரூ.730 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மும்மூர்த்தி நகர் டாஸ்மாக் மதுபானக்கடை அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த காட்டுராஜா(26)  வை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து 20 லாட்டரி, ரூ.530 பணத்தை பறிமுதல் செய்தனர். திருப்பூர் வஞ்சிபாளையம் முள்ளிகாட்டு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரபு(29) தலைமையில் உட்பட 3 பேர் விளையாடியது தெரியவந்தது. போலீசார் கைது செய்து ரூ.200 பறிமுதல் செய்தனர். காந்தி நகர், பி்ன்னிகாம்பவுண்ட் ஆகிய இடங்களில் மதுபானம் விற்பனை செய்த குமார்(40), முருகேஷன்(27) ஆகியோரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: