மயிலம், பிப். 15: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலகுறைவு அடைந்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைவர் பூரண குணமடைந்தால் முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் முடிகாணிக்கை செலுத்துவது மற்றும் பால்குட ஊர்வலம் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து சென்னை வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.