கஞ்சா விற்றவர் கைது

பாலக்காடு, பிப்.14: பாலக்காடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போதை தடுப்பு பரிவினர் நேற்று கைது செய்தனர்.

 பாலக்காடு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கையரம்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போதை தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போதைத் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சம்சுதீன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சுற்றித்திரிந்த பெரியசாமி(32), என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்

தமிழகம் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: