ஈரோடு, பிப். 7: ஈரோடு கனிராவுத்தர் குளம் அடுத்த சின்னசேமூரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 20ம் தேதி பூச்சாட்டு, கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 5ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பக்தர்கள் வீடுகளில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர்.