3 பவுன் தாலி செயின் திருட்டு ஒருவர் மீது சந்தேக வழக்கு

திருக்கோவிலூர், பிப். 2:  திருக்கோவிலூர் அடுத்த ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு(39). இவரது உறவினர் மகன் சரவணன் வேலு வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டு அலமாரியில் வைத்திருந்த 3 பவுன் தாலி செயினை சரவணன் திருடிச்சென்றதாகவும், ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலில் சத்தியம் செய்ய வேலு சரவணை வற்புறுத்தினர். அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து வேலு கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சரவணன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: