சிவகங்கை, பிப்.2: திருப்பத்தூர் அருகே உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தை நடத்த விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: திருப்பத்தூர் தாலுகா, கல்வெட்டுமேடு, இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இமையத்தினை பொறுப்பேற்று நடத்திட தகுதி வாய்ந்த அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்கள் 04.02.2019 முதல் 12.02.2019 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க வேண்டிய கடைசி நாள் 13.02.2019 ஆகும். விண்ணப்பப் படிவங்களை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், மருதுபாண்டியர் நகர் மேல்நிலைப்பள்ளி வளாகம், சிவகங்கை என்ற முகவரியில் பெற்று பூர்த்தி செய்து மீண்டும் இதே அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.