வீரவநல்லூரில் சாதி, மத நல்லிணக்க விழிப்புணர்வு நாடகம்

வீரவநல்லூர், பிப். 1:  வீரவநல்லூரில் காவல்துறை சார்பில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தலைப்பில் சாதி, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காவலர்களின் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. சேரன்மகாதேவி ஏஎஸ்பி ஆஷிஸ்ராவத் தலைமை வகித்தார். அம்பை டிஎஸ்பி ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆற்றங்கரையோர படித்துறையில் வளர்ந்து வரும் சாதி பாகுபாடு பிரச்னைகள், பள்ளி - கல்லூரிகளில் மாணவர்களின் சாதி நிலைப்பாட்டால் ஏற்படும் பிரச்னைகள், கோயில்களில் பரிவட்டம் கட்டுதல், மத ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து காவலர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். இதில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ஜோஸ், எஸ்ஐக்கள் முருகேஷ், ராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: