ஓசூர், ஜன.29: ஓசூர் ரயில் நிலையம் அருகில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ேநற்று தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தின்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்துவதை கைவிட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை, குறைந்த பட்ச ஊதியமாக ₹20 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.