ஆத்தூர், ஜன.22: ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ₹25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று இரவு பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் ஆத்தூர், நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.