ஓசூர், ஜன.22: ஓசூரில், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் கண்ணன். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா. இவர், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று வழக்கம்போல பணிக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 3 சவரன் தாலி செயின், 1 சவரன் கம்மல், 2 வெள்ளி விளக்குகள், 2 பித்தளை விளக்குகள், 4 ஆயிரம் ரொக்கப்பணம், 4 வாட்ச், மற்றும் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.