சின்னசேலம், ஜன. 22: சின்னசேலத்தில் உள்ள ரேஷன் கடையை சீரமைப்பதுடன், அங்கு நடக்கும் சமூக விரோத செயலை தடுத்திட சுற்று சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னசேலத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் அருகில் கடந்த 2014ம் ஆண்டு புதிய ரேஷன் கடை சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த கடையில் இருந்து காந்தி நகர், கடைவீதி, தெற்கு ஒற்றைவாடை தெரு, போயர் தெரு, மீனவர் தெரு, வாணிய
பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த ரேசன் கடையில் மாற்றுத்திறனாளிகளும் வந்து பொருட்களை வாங்கி செல்லும் வகையில் ஒரு பக்கம் படிக்கட்டு மற்றும் அதே பக்கத்தில் படிக்கட்டு இல்லாமல் சாய்வு தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தரமில்லாமல் கட்டியதால் சாய்வுதளம் முழுவதும் பெயர்ந்துபோய் கிடக்கிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலை கடந்த ஒரு ஆண்டாகவே உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.