தேவையற்ற வேகத்தடைகள் அதிரடியாக அகற்றம்

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 22: தினகரன் செய்தி எதிரொலியால் திருவெண்ணெய்நல்லூர்- அரசூர் சாலையில் இருந்த தேவையற்ற வேகத்தடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.திருவெண்ணெய்நல்லூர்- அரசூர் செல்லும் 7கிலோ மீட்டர் சாலையில் 23 வேகத்தடைகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினகரன் நாளிதழில் கடந்த 19ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதில் தேவையற்ற இடத்தில் இருந்த வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று காலை திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு  தலைமையில், உதவி பொறியாளர் இளஞ்செழியன் மற்றும் சாலை பணியாளர்களுடன் காந்திகுப்பம், தக்கா, திருமுண்டீச்சரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்த தேவையற்ற 8 வேகத்தடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர். இதைக் கண்ட வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: