×

பெண்ணை பின் தொடர்ந்தவர் கைது

ராமநாதபுரம், ஜன. 18:   திருப்பாலைக்குடி அருகே பாரனூரைச் சேர்ந்தவர் பூசைத்துரை பூ வியாபாரி. இவரது மனைவி சிவரஞ்சனி (24). இவர் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு அருகே கொல்லைப்பகுதியில் நின்றிருந்தார். அப்போது அப்பகுதியில் குடித்துக்கொண்டிருந்த தேத்திடல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (39) தனியாக பெண் செல்வதை பார்த்து பின்தொடர்ந்து சென்று அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அதிர்ச்சியில் பெண் கூச்சலிட்டு சத்தம் போட்டார். இதையடுத்து பாண்டித்துரை தப்பி ஓடிவிட்டார். புகாரின்பேரில் திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து பாண்டித்துரையை கைது செய்தார்.

Tags : arrest ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...