ஓசூர், ஜன.10: ஓசூரில் காண்ட்ராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை மற்றும் ₹40 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரில் வசித்து வருபவர் திருஞானவாசகர்(44). இவர் கிழக்கு ஓசூரில் எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி எப்சிபா(34), தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 16 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். நேற்று காலை, மகன் மற்றும் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கணவன்-மனைவி இருவரும் பணிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர், பகல் 1 மணிக்கு பணி முடிந்து திருஞான வாசகர், வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.