கள்ளக்குறிச்சி, ஜன. 8: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று 216 விவசாயிகள் 500 மூட்டை விற்பனைக்கு தானியங்களை எடுத்து வந்தனர். அதில் 200 மூட்டை மக்காச்சோளம், 250 மூட்டை உளுந்து, 15 மூட்டை மணிலா மற்றும் கம்பு, எள்ளு, பச்சைபயிறு, வரகு, ராகி உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனை ஆத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
100 கிலோ எடைகொண்ட மக்காச்சோளம் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.1509க்கும், அதிகபட்சமாக ரூ.1769க்கும் விற்பனை செய்யப்பட்டது.