உலகம் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரவிருக்கும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை Jul 01, 2021 WHO ஜெனீவா உலக சுகாதார நிறுவனம் தின மலர் ஜெனீவா: 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரவிருக்கும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது. டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு இப்போது 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது, கடந்த வாரத்தை விட தற்போது 11 நாடுகள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் 29, 2021 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு தனது கொரோனா வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையில் 96 நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவித்து உள்ளன. இருப்பினும் இது மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசைமுறைத் திறன்கள் குறைவாக இருப்பதால் இது குறைத்து மதிப்பிடப்படுகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஆல்பா மாறுபாட்டின் பாதிப்புகள் 172 நாடுகளிலும் 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும் 72 நாடுகளில் காமா வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா வகை பாதிப்புகளும் உள்ளதாக தெரிவித்து உள்ளது. வரவிருக்கும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.29 -கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16.75- கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.62- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமாா் 11,455,327பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். … The post 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரவிருக்கும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை appeared first on Dinakaran.
அடுத்தடுத்து தாக்குதல் எதிரொலி விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கிக்கு தடை: லெபனான் அரசு திடீர் அறிவிப்பு
காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கைக் கொல்ல சதித்திட்டம் ?: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன்
புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை
12 பேர் பலி, 3,000 பேர் காயமடைந்த நிலையில் லெபனானில் பேஜரை தொடர்ந்து வாக்கிடாக்கி வெடித்துச் சிதறியது: மேலும் 9 பேர் பலி
லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் ‘சைபர்’ தாக்குதல்; தைவானின் 5,000 ‘பேஜர்’ சாதனம் ெவடிகுண்டாக மாறியது எப்படி?.. அமெரிக்கா கைவிரிப்பு; இஸ்ரேல் உளவு அமைப்புக்கு தொடர்பு?