திண்டிவனம், ஜன. 4: திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்தூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2014- 2015ம் ஆண்டு சுமார் ரூ. 6.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் இந்த அங்கன்வாடிக்கு வந்து செல்வது வழக்கம்.