செஞ்சி, ஜன. 3: மேல்மலையனூர் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யும் பொருட்டு கடந்த 28ம் தேதி முதல் ஜனவரி 11ம் தேதி வரையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக விண்ணப்பம் செய்யலாம் என மேல்மலையனூர் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, இவ்வட்டத்தில் காலியாக உள்ள ஆர்க்காம்பூண்டி(பிற்படுத்தப்பட்டோர்) பெண்கள், ஆதரவற்ற விதவை, அவலூர்பேட்டை (பொது), கெங்கபுரம் (பிற்படுத்தப்பட்டோர்(பொது), கம்மந்தாங்கல்(பொது), மேல்செவலாம்பாடி(ஆதிதிராவிடர்) பெண்கள், (ஆதரவற்ற விதவை), நாராயணமங்கலம்(மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), பாப்பந்தாங்கல்(பிற்படுத்தப்பட்டோர், (பொது) பரையந்தாங்கல்(பிற்படுத்தப்பட்டோர்), முஸ்லீம்முன்னுரிமை, (பொது) ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.