விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்தியாத்தோப்பு, டிச. 20: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜாவை கண்டித்து சேத்தியாத்தோப்பு நகர செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட செயலாளர் பால அறவாழி, பொருளாளர்  கங்கை அமரன் உள்பட பலர் பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகள் ராஜா மீது  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் ஹெச்.ராஜாவின் மீது வழக்கு பதிய வேண்டும் என சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Related Stories: