விழுப்புரம், டிச. 12: மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை வரவேற்று விழுப்புரத்தில் காங்கிரஸ் கடசியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றதை வரவேற்று நாடு முழுவதும் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஆர்டிவி சீனுவாசக்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் எதிரே இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கட்சியினர் கொண்டாடினார்கள். நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.