தேங்கி நிற்கும் கழிவுநீர் பொதுமக்கள் அவதி

உளுந்தூர்பேட்டை, டிச. 12: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கெடிலம் கிராமம். இந்த கிராமத்தில் சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் உள்ள பொதுமக்கள் குடியிருந்து வரும் தெருவில் கழிவுநீர் செல்வதற்கான வாய்க்கால் வசதி இல்லாமல் உள்ளது.

இதனால் தெருக்களில் மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன், தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளதாக அந்த தெருவில் வசித்து வருபவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: