கடையை உடைத்து சேதம்: 3 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர், டிச. 12: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால்(48). இவர் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பலகார கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தனது கடையில் இருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பழனி, குப்புசாமி மகன் பழனி, கதிரேசன் ஆகியோர் அந்த பலகார கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஜெயபாலை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து ஜெயபால், மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பழனி, மற்றொரு பழனி, கதிரேசன் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: