கிருஷ்ணகிரி, டிச.11: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாளை(12ம் தேதி) நடக்கிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் துறையின் கூட்டு முயற்சியில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதற்கான சிறப்பு பதிவு முகாம், பர்கூர் தனி தாசில்தார் அலுவலகத்தில் நாளை(12ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.