×

மாரியூர் சிவன் கோயிலில் மழை வேண்டி 108 சங்காபிஷேகம்

சாயல்குடி, டிச.11: சாயல்குடி மாரியூர் சிவன் கோயில்களில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவள நிறவள்ளி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயிலில் உலக நன்மை, மழை பெய்ய வேண்டி 108 சங்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, மூலவரான பூவேந்தியநாதருக்கு 108 சங்கிலிருந்த புனித நீர், பால் மற்றும் 11 வகை சிறப்பு பொருட்களால் அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் சார்பில் கூட்டு பிரார்த்தனை, பஜனைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்படுகளை கடலாடி, மாரியூர் பிரதோஷ கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். இதுபோல் சாயல்குடி கைலாசநாதர் மீனாட்சியம்பிகை கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.

Tags : 108 Shivshabhagam Shrine ,Mariyoor Shiva Temple ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை