×

சம்பளம் குறைவு கடைக்கு லோன் வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளி மனு..

ராமநாதபுரம், டிச.11: ராமநாதபுரம் அருகே  சத்திரக்குடி வளநாடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (30). மாற்றுத்திறனாளி. பிறந்த சில ஆண்டுகளில் அவருக்கு   தோல்  வியாதி வந்துள்ளது. இதன் காரணமாக  தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள் என அனைவரும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார். பள்ளிக்கூடம் போகாத நிலையில் பாட்டி வீட்டில் சுரேஷ் வளர்ந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவரது, பாட்டி இறந்து விட்டார்.
இந்நிலையில் தனியாக வாழ்ந்து வருவதாகவும், சிறிய அளவில் பெட்டிக் கடை வைத்து பிழைத்து வருவதாகவும் கடைக்கு முதலீடு செய்ய தேரிருவேலி வங்கியில்  கடன் கேட்ட போது  தர மறுத்துவிட்டனர். வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை