நெல்லை, டிச. 11: கருகும் நெற்பயிரை காப்பாற்றக் கோரி நாங்குநேரி தாலுகா விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு நெற்பயிருடன் வந்து மனு கொடுத்தனர். நாங்குநேரி அருகே சவளைக்காரன்குளம், இலங்குளம் விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனு: கடந்த சில நாட்களாக மழையால் குளங்களில் தண்ணீர் இருந்தது. அதை நம்பி நாங்கள் வயல்களில் நெல் நடவு செய்தோம். தற்போது மழையில்லாததால் தண்ணீரின்றி குளங்கள் காணப்படுகின்றன. இதனால் நெற்பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே களக்காடு பச்சையாற்று அணைக்கட்டில் இருந்து இலங்குளம், நெடுங்குளம், சடையநேரி, சவளைக்காரன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.